tamilnadu

அண்ணாமலையின் ஆபாச பேச்சு: வலுக்கும் கண்டனங்கள் !

சென்னை,ஜன.20- பாஜக தலைவராக அண்ணா மலை பொறுப்பேற்றதில் இருந்து  பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி  வருகிறார். குறிப்பாக பத்திரிகை யாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என்றால், அவர்களிடம் அவதூறாகவும், அவமரியாதையாக  பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அண்ணாமலை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் களை இழிவாக பேசி சர்ச்சை யில் சிக்கினார்.

அதற்கு பத்திரிகை யாளர்கள் சங்கம் உட்பட எதிர்க்கட்சி யினர் என அனைவரும் கண்டனங் கள் தெரிவித்தார். இருப்பினும் தனது திமிர் பேச்சு தொனியி லிருந்து மாறாமல், தொடர்ந்து  அண்ணாமலை பத்திரிகையாளர் களை அவமதித்து வருகிறார். காரணம், ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அண்ணாமலைக்கு பதில் தெரியாவிட்டால் அப்படியே பேச்சை மாற்றி திசை திருப்பி விடு கிறார்.

இப்படியே பல முறை செய்த  அண்ணாமலை, தற்போது செய்துள் ளார். பத்திரிகையாளர் மற்றும் அமைச்சர் உதயநிதியை ஆபாச  வார்த்தைகளால் பேசி அண்ணா மலை மேலும் சர்ச்சையில் சிக்கி யுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த நிலையில், அண்ணாமலை பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவரிடம் அமைச்சர் உதயநிதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முறையாக பதிலளிக்காமல் ஆபாச வார்த்தைகள் கொச்சை மொழியில் பேசியுள்ளார். அண்ணாமலை யின் இந்த பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து அண்ணா மலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சனிக்கிழமை (ஜன.20) பேசிய அண்ணாமலை, தான் கொங்குநாடு மொழியில் பேசியதாகவும், அதில் ஆபாசம் இல்லை என்றும் மட்டமான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கும் அண்ணாமலை, தன்னால் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், அண்ணாமலை யின் பேச்சுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர்.

அந்த வகையில் கனி மொழி எம்.பியும் தனது கண்ட னத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளார் பதிவில், “ஒரு மாநிலத்தின் அமைச் சர் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் கார்த்திகைச்செல்வன் குறித்தும்  தரம் தாழ்ந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி யிருப்பது கடும் கண்டனத்திற் குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியல் தரத்தை தாழ்த்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.