சென்னை, ஏப். 6- வெடிகுண்டுபோடுவதும், பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதும் பாஜக தான் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் அம்பத்தூ ரில் வெள்ளியன்று (ஏப். 5) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், பிரதமர் மோடி, அமித்ஷா என தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பாஜக வெற்றிபெற முடியாது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மோடி வாலாட்ட லாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது என்றார்.
திமுக அரசு பல்வேறு நலத்திட்டங் களை அமல்படுத்தியுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர். வட மாநிலங்களிலும் அவர்க ளின் தோல்வி உறுதியாகி வருவதால் பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
ஒன்றியத்தில் உள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க் கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்ட அமைச்சர்களை கைது செய்கிறார் கள். தேசத்தையும் மக்களையும் பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள். அரசியல மைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை, சமூக நீதியை, மாநில உரிமைகளை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ள நீட் தேர்வு ரத்து என்பதற் காகவே தமிழ்நாட்டு மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற இந்த பகுதி மக்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பாரதி கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல். சுந்தர்ராஜன், தொகுதி பொறுப் பாளர் சு.லெனின் சுந்தர், சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, எச்.பீர்முகம்மது (காங்கிரஸ்), டி.சி.ராஜேந்திரன் (மதிமுக), தேவஞான முதல்வன் (விசிக) உள்ளிட்ட கூட்ட ணிக் கட்சி தலைவர்கள் பேசினர்.
கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் பி.டி.சி.செல்வராஜ், திமுக கிழக்கு பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜ கோபால், சிபிஎம் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, சிபிஐ பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மதிமுக நிர்வாகிகள் தாமோதரன், ஜெ.சிக்கந்தர், விசிக நிர்வாகி இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமான கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.