மதுராந்தகம் அடுத்த பழையனூர் சாலை கிராமத்தில் ஜனாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலண்டினா கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
********
சமத்துவ பொங்கல் திருவொற்றியூர் 5ஆவது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கிளைச் செயலாளர் கே.கே.புஷ்பா தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்டச் செயலாளர் எஸ் பாக்கியம், சுகுணா உள்ளிட்ட கிறித்துவ, இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர்.
********
செங்கல்பட்டு மாவட்டமாக பிரிந்த சில மாதங்களே ஆன நிலையில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் காவல் துறையினர் தனது குடும்பத்தினரோடு பங்கேற்றனர்.
********
திருத்தணி ஒன்றியம் தாடூர் பகத்சிங் நகர், இருளர் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, வார்டு உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
********
காஞ்சிபுரம் நகரம் ஓரிக்கை பகுதியில் தமுஎகச சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
********
திருவொற்றியூர் 6ஆவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா உமா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பாக்கியம். ராதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
********