சென்னை,ஜன.20- பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர். இவர் சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார். முறைகேடான பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள னர். அதன் அடிப்படையில் பீட்டர் வீட்டில் வெள்ளிக்கிழமை (ஜன.19) காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
பீட்டர் தொடர் புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் அமலாக்கத்துறை தெரிவிக்க வில்லை. இந்த நிலையில் சனிக்கிழமையும் 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடு பட்டனர்.
தொழில் அதிபர் பீட்டர் தொடர் பான இடங்களில் சோதனை நடத்தி யதில் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை பற்றிய விவரங்கள் அமலாக்கத்துறை வெளியிடவில்லை. இந்த சோதனையின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.