tamilnadu

img

மின்வாரியத்தை துண்டு துண்டாக பிரிப்பதா?

சென்னை, பிப்.3- மின்சார வாரியத்தை துண்டு துண்டாக பிரித்து தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட் டுள்ளது கூறி சனிக்கிழ மையன்று (பிப்.3) மாநிலம் முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2010ஆம் ஆண்டு,  தமிழ்நாடு மின்சார வாரியம்,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் என மூன்று  நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்  மேலும் இரு நிறுவனங்க ளாக அரசு பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டது. இதனை கண்டித்து சென்னை அண்ணாசாலை யில் உள்ள தமிழ்நாடு மின் ன்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு அனைத்து மின்சாரத்துறை தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அப்போது செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், “தமிழ்நாடு மின்துறை தற்போதும் கடும் நெருக்கடியை சந்தித்து வரு கிறது; கடன் சுமை அதிகரித் துள்ளது. இதனால் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை, தமிழ் நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் என்ற இரண்டு நிறுவனங்களாக அரசு பிரித்துள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற ஒரு புதிய  நிறுவனத்தையும் உரு வாக்கி உள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் பெயரில் மேலும் மேலும்  கடனை வாங்கி மின்வாரி யத்தை திவால் நிலைக்கு கொண்டு சென்று தனியார் மயமாக்க உள்ளனர். இதனால் மின்வாரியமே இல்லாமல் போகும்.இத்தகைய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி போராடுகிறோம்” என்றார். இந்த போராட்டத்தில் மூர்த்தி (பணியாளர் சம்மேள னம்), சேக்கிழார் (எம்ப்ளா யீஸ் பெடரேசன்), சம்பத்  (பொறியாளர் சங்கம்),  சேவியர் (ஐஎன்டியுசி)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாநிலம்  முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவல கங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.