சென்னை, மார்ச் 14- சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சென்னையில் வெள்ளி யன்று (மார்ச் 13)மகளிர் செய்தியாளர்க ளுக்கான பயிலரங்கை நடத்தியது. இந்த பயிலரங்குக்கு தலைமை யேற்ற தகவல் ஒளிபரப்பு அமைச்சகத் தென்மண்டலத் தலைமை இயக்குநர் எஸ் வெங்கடேஸ்வர், மகளிர் செய்தி யாளர்களுக்கு தனியாக பயிலரங்கு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார். ஊடகத்துறையில் பெண்கள் செய்தியாளர்களாக பங்கேற் பது அதிகரித்து வருவது மகிழ்ச்சி யளிக்கிறது என்றார். பெண் செய்தி யாளர்கள் தங்கள் பாலினத்திற்கு அதிகாரமளித்தல் குறித்த செய்தி களுக்கு முக்கியத்துவம் தரும் அதே வேளையில் அரசின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உரிய இடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பயிலரங்கில் தொடக்க உரை நிகழ்த்திய தமிழ்நாடு பெண் வழக்கறி ஞர்கள் இணையத்தின் தலைவர் கே சாந்தகுமாரி, பணியிடங்களில் குறிப்பாக ஊடகம் சார்ந்த பணியிடங்க ளில் பெண் பணியாளர்களின் பாது காப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார். அனைத்து அலுவலகங்களிலும் உள் புகார் குழுக்கள் (ஐசிசி) அமைத்துச் செயல்படுவது பெண்களுக்கு எதிரான இன்னல்களைத் தடைசெய்வதாகவும், குறை தீர்ப்பதாகவும், தண்டனை அளிப்பதாகவும், அமையும் என்று அவர் கூறினார். அரசுகள் பட்ஜெட் தயாரித்து தாக்கல் செய்யும்போது , பாலின அடிப்படையிலான பட்ஜெட் ஒதுக்கீடு கள் மற்றும் திட்டங்களுக்கு முக்கியத்து வம் அளிக்க வேண்டும் என்று திருமதி சாந்தகுமாரி கேட்டுக் கொண்டார். பத்திரிகைகள், மாற்றங்களை உருவாக்கும் சக்திகளாக செயல்படு கின்றன என்றும் பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கு கடைசிப் புகலிடமாக விளங்கு கின்றன என்றும் உதாரணங்களுடன் விளக்கிய அவர், பெண் பத்திரிகை யாளர்கள் தங்கள் துறையில் முன்னேறு வதைத் தடுக்கும் வகையில், அவர்கள் நடத்தையைக் குறை கூறி கருத்துக்கள் வெளியிடப்படும் போக்கை கண்டனம் செய்தார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
“பணி இடத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்” என்ற தலைப்பில் பயிலரங்கின் முதல் அமர்வு நடைபெற்றது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உடலியல் பயிற்சி மற்றும் உயிர் எந்திரவியல் துறையின் தலைவரான டாக்டர் கிரேஸ் ஹெலினா, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்தகுதி முக்கியமாகும் என்று கூறி னார். தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக 35 வயதிலேயே பலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு உடல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படு வதாகக் கூறினார்.
பெண்களுக்கும் உடல்பயிற்சி அவசியம்
நீண்ட நேரம் உழைப்பதற்கான திறனை உடற்தகுதி அளிப்பதாகவும், உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகி யவை ஆரோக்கியமான உடல்நி லைக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று அம் சங்களும் அனைவருக்கும் முக்கிய மாகத் தேவை என்று அவர் வலியுறுத்தி னார். தற்போது சொகுசான வாழ்க் கைக்கு பழக்கப்பட்டு விட்டதால், உடற்பயிற்சி அடியோடு இல்லாமல் போய், பல்வேறு உபாதைகள் ஏற்படுவ தாகத் தெரிவித்தார்.
வேலைக்கு ஏற்ப உணவு
தேநீர், காபி போன்ற பானங்கள் உட லுக்கு தீங்கு இழைப்பவை என்று கூறிய அவர், அடிக்கடி தண்ணீர் பருகுவ தால், உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதாகத் தெரிவித்தார். தரை யில் அமர்ந்து உணவு அருந்துதல் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறி னார். ஒவ்வொருவரும் தாங்கள் செய் யும் வேலைக்கு ஏற்ப, உணவு உட்கொள் வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும், அதிக அளவில் உணவு உட்கொண்டு, அமர்ந்தபடி வேலை செய்வதால், கலோரிகள் முழுவதுமாக எரிக்கப்படாமல், வயிறு உள்ளிட்ட பகுதி களில் கொழுப்பாகத் தங்கிவிடுவதாக அவர் தெரிவித்தார்.
அழமான அறிவுடன் செய்திகள்
இரண்டாவது அமர்வாக ஊடகங்க ளில் பெண்கள் என்ற தலைப்பில் மூத்த பெண் பத்திரிகையாளர் லஷ்மி சுப்ர மணியன் பேசினார். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் தனது அனுபவங் களை பகிர்ந்து கொண்ட அவர், புதிதாக வரும் பெண் ஊடகவிய லாளர்கள் செய்திகளை தரும்போது, எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். ஊடகங்க ளில் பணிபுரியும் பெண்களுக்கு எதை யும் எதிர்கொள்ளும் துணிச்சல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். எந்தப் பிரச்சினையையும் மேம் போக்காக அணுகாமல், அதுபற்றிய ஆழமான அறிவுடன் செய்திகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக, நிகழ்ச்சியில் வரவேற் புரை நிகழ்த்திய பத்திரிகை தகவல் அலுவலக ஊடகத் தகவல் அலுவலர் கீதா, மத்திய அரசின் நலத்திட்டங்களை பெண் ஊடகவியலாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனைத்து அமர்வு களையும் பிஐபி அலுவலர் ஸ்ரீவித்யா ஒருங்கிணைத்தார். இந்த பயிலரங்கில் அகில இந்திய வானொலி செய்திப் பிரிவு இயக்குனர் திரு.வை.பழனிசாமி, மண்டல மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குனர் ஜே. காமராஜ், பத்திரிகை தகவல் அலு வலக துணை இயக்குனர் நதிம் துஃபைல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.