tamilnadu

img

2011 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை


  2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு  கட்டாயமில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 2011க்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் ஏப்ரல் 29,30 நடைபெறும் தேர்வைக் கட்டாயம் எழுத வேண்டும் இதுவே கடைசி வாய்ப்பு என்றும் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
   இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 2011 ஆண்டு வெளியான ஆணைக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கத் தகுதித் தேர்வு கட்டாயமல்ல ,பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் அவர்கஆளி தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

;