tamilnadu

img

நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு-அமைச்சர் செந்தில் பாலாஜி  

நடப்பாண்டில் தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இவர் கூறுகையில், 2014 முதல் 2022 வரை நிலுவையில் சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகக்குறுகிய அடித்தளத்தில் உயர்மின் கம்பங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 2,000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். கேங்மேன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.  

மின்துறை, தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே செயல்படும், நலிவடைந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலையில் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான திறன் உடையவை, அதிக திறனுள்ள மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். மேலும் ரூ. 1,649 கோடியில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.  

இதையடுத்து, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணை மின் நிலையங்களில் நிறுவப்படும் என்று கூறினார்.