சென்னை:
வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையருடன் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
வரும் நவம்பர் 16 ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், அன்று முதல் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புவோர், திருத் தம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் நவம்பர் 3 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படவுள்ளது.இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கான முன்னேற் பாடுகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற் கொண்டார்.அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கேட்டறிந்தார்.