tamilnadu

img

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி 9 பேரில் 8 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நூலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்பு நிகழ்ச்சியில்  உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, 8 நீதிபதிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சத்திகுமாா், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து இன்று 8நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.