tamilnadu

img

தமிழகம் வர அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்

சென்னை, மார்ச் 7 -
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் இ-பாஸ் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.
ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்கள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

;