india

img

இவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு....

சென்னை:
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர இதர மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாடு வருபவர்களுக்குஇ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர்  கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு  பிப்ரவரி 25ஆம் தேதி அறிவித்திருந்தது.

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வியாபார விஷயமாக தமிழகத்திற்கு வந்து 72 மணி நேரம்தங்குபவர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்த லில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும்  கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி தவிர அனைத்து சர்வதேச பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாகும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;