districts

ஊழியர்களை மிரட்டும் விர்டுசா ஐடி நிறுவனம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை,டிச.15- ஊழியர்களை சட்டவிரோதமாக பணியில் இருந்து நீக்கும் விர்டுசா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை யுனைட் தொழிற்சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பரணிதரன், பொதுச்செயலாளர் அழகு நம்பிவெல்கின் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  விர்டுசா ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப  நிறுவனமாகும். இது இந்தியாவின் பல மாநிலங்க ளில் அமைந்துள்ளது. இந்நிறு வனம் இந்தியா முழுவதும் ஆயிரக் கணக்கான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. சமீ பத்தில், சென்னை நாவலூரில் அமைந்துள்ள விர்டுசா நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு விலகும்படி வற்புறுத்தி மிரட்டி வருகிறது. தேசிய திறன் பதிவேட்டில் கருப்பு குறியிடுதல்,  ஊழியர்களை விடுவிக்கும் நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்துதல்,  பின்னணி சரிபார்ப்பு அழைப்புகளில் பொய் கூறுதல்,  வேலை வழங்குவதில் உரிமை யாளரின் இயலாமையை மறைக்க ஊழியர்கள் மீது குற்றம்சாட்டுதல்,  புதியவர்கள் மற்றும் புதிய பணி யாளரை 2 ஆண்டுகளுக்குள் ராஜினாமா செய்ய வற்புறுத்துதல், பின்னர் சட்டவிரோத பத்திரத்தை மேற்கோள் காட்டி, ஊழியர்களிடம் 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கூறு தல் உள்ளிட்ட காரணங்களை கூறி ஊழியர்களை மிரட்டி வருகிறது.

ஊழியர்கள் இதுகுறித்து நிறு வனத்தின் மனிதவள மேலாளரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதிலளிக்கவில்லை. ஆனால் அவர் ஊழியர்களின் வாழ்வாதார இழப்பதைக் கருத்தில் கொள்ளாமல் கொடூரமாக அச்சுறுத்தி வருகிறார். விர்டுசாவில் இதுபோன்று நடை பெறுவது  இது புதிதல்ல. 2008 ஆம்ஆண்டு  அவர்கள் ஊழி யர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்து ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தினர். லாபத்தை அதிகரிக்க இந்த சட்ட விரோத நடைமுறையை விர்டுசா பயன்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த ஊழியர்களுக்காக செயல்படும் யுனைட் சங்கம் இந்த நடை முறையை கண்டிக்கிறது மற்றும் விர்டுசாவின்  சட்டவிரோத ஆட்குறைப்பு மற்றும் கட்டாய ராஜினாமா நடைமுறையை மாநில அரசு  தலையிட்டு தடுத்து நிறுத்து மாறு கேட்டுக்கொள்கிறது. சட்ட விரோத ஆட்குறைப்பை நிறுத்தவும், அரசாங்கத்தின் விரைவான தலை யீட்டைக் கேட்கவும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர் களையும் மீண்டும் பணியில் அமர்த்த வும் யுனைட் கோருகிறது. யுனைட் சங்க நிர்வாகிகள் தொழிலாளர் ஆணையரிடம் விர்டுசா மீது முறை யான புகார் அளித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;