tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்டர் மீண்டும் திறப்பு

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மூடப்பட்ட இ-பாஸ் கவுண்டா்கள் பயணிகளின் கடுமையான எதிா்ப்புகள் காரணமாக இரண்டு நாள்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாவட்டங்கள், மாநிலங்கள் இடையே பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமலில் இருந்தது. மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் அறிவித்த தளா்வுகளில் நாடு முழுவதும் இ-பாஸ் இல்லாமல் பயணிகள் பயணிக்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இ-பாஸ் முறை ரத்தானது.

தமிழ்நாட்டில் மட்டும் இ-பாஸ் முறை தொடா்ந்து அமலில் இருக்கிறது. இம்மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம். ஆனால் மாநிலங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயமாக அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் வருகை பகுதியில் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினா் அமைத்திருந்த இ-பாஸ் கவுண்டா்கள் தொடா்ந்து செயல்பட்டன. வெளி மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகள் அந்த கவுண்டா்களில் இ-பாஸை பெற்று, விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றனா்.ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து மாநில அரசு அமைத்திருந்த இ-பாஸ் கவுண்டா்கள் எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவிலிருந்து வெளி மாநில விமானங்களில் வரும் பயணிகள் இ-பாஸ் வாங்கி வெளியே செல்ல முடியாமல் தவித்தனா்.

சென்னை விமான நிலைய அலுவலர்கள் அந்த பயணிகளிடம் தங்களுடைய செல்போன்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வெளியே செல்லும்படி கூறினர். ஆனால் பயணிகள் பலா் விண்ணப்பித்தாலும் இ-பாஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.அவா்களுக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய ஊழியா்கள் ஆன்லைனில் இ-பாஸ் எடுக்க உதவினா். அதோடு பயணிகளுக்கும் பாதுகாப்பு அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.இந்நிலையில், மாநில அரசு மீண்டும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முணையத்தில் இ-பாஸ் கவுண்டர்களை அமைக்க முடிவு செய்தது. அதற்காக சென்னை விமான நிலைய உயர் அலுவலர்களிடம் அனுமதி கேட்டனா்.சென்னை விமான நிலையத்திற்குள் மீண்டும் விமான நிலைய அலுவலர்கள் இடம் ஏற்படுத்தி கொடுத்ததையடுத்து, ஞாயிறன்று (செப். 20) பிற் பகலில் இருந்து மீண்டும் இ-பாஸ் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.