tamilnadu

img

பாதாளச்சாக்கடை பணியின்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தாம்பரம், மார்ச் 17- சென்னை, தாம்பரம் அடுத்துள்ள கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள ஆதி நகர் பகுதியில், தாம்பரம் மாநகராட்சி சார்பில் ஒப்பந்த நிறுவனம் மூலமாக பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி சனிக்கிழமை காலை முதல் நடைபெற்று வந்த்து.

15 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலை யில் ஊற்று நீர் வந்ததால். அதனை அகற்றும் பணியில் தொழிலாளிகள் இரு வர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர் பாராத விதமாக திடீரென மண் சரிந்தது. மண் குவியலுக்குள் அங்கு பணியில் ஈடு பட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் சிக்கிக் கொண்டனர். இதனை அடுத்து, மண் சரிவில் சிக்கியவர்களில் ஒருவர் மேலே வந்த நிலையில், முருகானந்தம் (26) என்பவர் மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டார்.

இதனை அடுத்து, அப்பகுதியில் இருந்த வர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் காவல்நிலையத்தினர் ஜேசிபி மூலம் மண்ணை அகற்றி, தொழிலாளி முரு கானந்தத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.  3 மணி போராட்டத்திற்குப் பிறகு சடலமாகத்தான் அவர் மீட்கப்பட்டார்.  

முருகானந்தத்தின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கவனக்குறைவாக செயல் பட்டதாக கூறி சேலையூர் போலீ சார்  ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடைக்கு பெரிய  பள்ளம் தோண்டும் போது மண் சரியாமல் இருக்க பக்கவாட்டில் இரும்பு தகடுகள் நிறுத்தி வைப்பது வழக்கம்.ஆனால் இங்கு தகடுகள் வைக்கப்படவில்லை. இதனால் மண் சரிந்து அப்பாவி தொழிலாளி உயிரிழந்துவிட்டார் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.