tamilnadu

img

பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின்

சென்னை:
திமுகப் பொருளாளராக துரை முருகன் நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழன் மார்ச் மாதம் மரணமடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது.கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந் தெடுப்பதற்காக மார்ச் 29 ஆம் தேதி திமுகவின் பொதுக் குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திமுகவின் பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழு கூடும் வரை திமுக பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கொரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகனின் கடிதம் மீதான நடவடிக்கை தற் காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.