சென்னை, ஜூன் 8- பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ஞாயிறன்று (ஜூன் 9) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கை வருமாறு:- மூர்மார்க்கெட் - திருவள்ளூர் இடையே ஞாயிறன்று காலை 9.45, 11.30, 12.10, 1.20 மணிக்கும், சென்னை கடற்கரை- திருவள்ளூர் இடையே பிற்பகல் 1.05 மணிக்கும், மூர்மார்க்கெட்- திருத்தணி இடையே காலை 10 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே காலை 10.05 மணிக்கும், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே காலை 10.15 பிற்பகல் 12.35 மணிக்கும், மூர்மார்க்கெட்- கடம்பத்தூர் இடையே காலை 10.30, 12 மணிக்கும், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே காலை 10.45 மணிக்கும், மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையே காலை 11.05, 12.50, 1.40 மணிக்கும், மூர்மார்க்கெட்- பட்டாபிராம் இடையே காலை 11.15, பிற்பகல் 12.20, 1 மணிக்கும், சென்னை கடற்கரை- ஆவடி இடையே காலை 11.10 மணிக்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மூர்மார்க்கெட்- திருத்தணி இடையே காலை 11.45 மணிக்கும், சென்னை கடற்கரை- திருத்தணி இடையே பிற்பகல் 12.10 மணிக்கும், சென்னை கடற்கரை- பட்டாபிராம் இடையே பிற்பகல் 1.50 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் வரை இயக்கப்படும் ரயில் (43753) ரத்து செய்யப்படுகிறது. மேலும் அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே காலை 7.10, 12 மணிக்கும், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் ரயில் (43412) அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டு ஆவடி- மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும். அரக்கோணம் - மூர்மார்க்கெட் இடையே காலை 8.55 மணிக்கும், ஆவடி- மூர்மார்க்கெட் இடையே காலை 9.15 மணிக்கும், ஆவடி- சென்னை கடற்கரை இடையே நாளை பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருத்தணி- அரக்கோணம் இடையே காலை 8.50 மணிக்கும், மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையே காலை 9.45 மணிக்கும், அரக்கோணம்- திருத்தணி இடையே காலை 11.55, 1.50, 2.25 மணிக்கும், ஆவடி- பிடிஎம்எஸ் இடையே பிற்பகல் 1.50 மணிக்கும் ஆவடி- திருத்தணி இடையே பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும் அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் பட்டாபிராம்- மூர்மார்க்கெட் விரைவு ரயிலாக இயக்கப்ப டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.