தமிழ் திரையுலகில் பரவும் போதைப்பொருள் கலாச்சாரம்'
சென்னை, ஜூன் 24- பாலிவுட், டோலிவுட், மாலிவுட் உலகில் இருந்து வந்த போதைப்பொருள் கலா சாரம் தமிழ் திரை உலகையும் விட்டு வைக்கவில்லை. தெலுங்கு, மலையாள திரை உலகிலும் போதைப்பொருள் கலாசாரம் பரவியது. தற்போது அது தமிழ்த் திரை உலகையும் விட்டு வைக்க வில்லை. பாலிவுட்டை பொருத்தவரை பல நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நிலையில், சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்திய தாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரிடம் கொக்கைன் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதை யடுத்து காவல் துறையினர் போதை பொருள் பயன்பாடு குறித்து கண்காணித்து வந்தனர். பொதுவாக இரவு விருந்து, கடற்கரை ரிசார்ட் வீடுகளில் நடை பெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்பாடு அவசியமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்று போதைப் பொருட்களை பயன்படுத்துவது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொகைன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திரை உலகில் அதிகரித்து வருகிறது.