tamilnadu

img

கழிவு நீரில் குடிநீர் குழாய்

ஆம்பூர், ஜூன் 15- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சார்பில்  36 வார்டுகளில் உள்ள குடியிருப்பவர்களுக்கும் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியூடவுன் ரயில்வே கேட் அருகே நகர் பகுதிக்கு கொண்டு செல்லும் குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர் தேங்கியுள்ளது.  மத்திய, மாநில அரசுகள் நோய் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்  நிலையில் நகராட்சி அலுவலகம் அருகிலேயே குடிநீர் கொண்டு செல்லும் குழாய் கழிவு நீரில் முழுகி உள்ள தால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சமந்தப்பட்ட அதிகாரி கள் குடிநீர் குழாயை சுற்றி உள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;