“இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா” என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமியை இரட்டை இலையை மறந்துவிடச் சொல்லுங் கள்” என்கிறார் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக அவர் ஞாயிறன்று செய்தி யாளரிடம் பேசுகையில், “தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அதிமுக இரண்டு பிரிவாக இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. அதிமுக சின்னம் தொடர்பாக ஆறு கோரிக்கைகள் நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளதாக கூறுகிறார்களே என நீதிபதி கேட்டதற்கு, புகார்கள் நிலுவையில் உள்ளது என்ற தேர்தல் ஆணையம் புகார்களைத் தவிர்த்துவிடலாம் எனக் கூறியது. அதை நீதிபதி ஏற்கவில்லை. புதிய கோரிக்கை மனுவைப் பெற்று, உடனடியாக அதைப் பரி சீலிக்க வேண்டும் என்றார். நாங்கள் எங்களது மனுவில் இரட்டை இலை யை ஓ.பன்னீர்செல்வத்திற்குக் கொடுக்க வேண்டும். அல்லது சின்னத்தை முடக்க வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்” என்றார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமியை இரட்டை இலையை மறந்துவிடச் சொல்லுங்கள். அவர் புதிய சின்னத்தை தேர்வு செய்ய வேண்டியது தான். இரட்டை இலை ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தான் கிடைக்கும். அல்லது முடக்கப்படும். சின்னம் முடக்கப்பட்டால் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.