கெலமங்கலம் அருகே பட்டியலின மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கிருஷ்ணகிரி, ஜூன் 25- தேன்கனிக்கோட்டை வட்டம், கெல மங்கலம் ஒன்றியம் காடு உத்தப் பள்ளி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொடுமையான தாக்குதல் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம், காடு உத்தனப்பள்ளி கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சுமார் 220 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் 15 பட்டியலின குடும்பங்களும் உள்ளன. ஜூன் 22 அன்று இரவு பட்டிய லினத்தைச் சேர்ந்த முருகேஷின் 19 வயது மகன் மகேந்திரனுக்கு பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின்போது டிரம்செட் வாசிக்கப்பட்டதைக் பொறுத்துக் கொள்ள முடியதாக ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்த அனுமந்தப்பாவின் மகன் சிவராஜ், மகேந்திரன் குடும்பத்தினரை தகாத வார்த்தை களைப் பேசியுள்ளார். இப்படி பேசாதீர்கள் என்று மகேந்திரன் குடும்பத்தினர் கூறியதற்கு மேலும் கடுமையாகப் பேசிய சிவராஜ், மகேந்திரனையும் தடுக்க வந்த தந்தை முருகேசையும் தாக்கியுள்ளார். மேலும், “உங்களை என்ன செய்கிறோம் பாருடா” என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில், 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் திரும்பி வந்த சிவராஜ், அவனது மகன் ஸ்ரீகாந்த், கார்த்திக், நவீன், சரண், ரகு, நாகேஷ், சுந்தர், சங்கர் ஆகியோர் மகேந்திரன் வீட்டுக்குள் புகுந்து கடுமையாகத் தாக்கி யுள்ளனர். வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பெண்ணின் தாலியை அறுத்து வீசியுள்ளனர். இத்துடன் சிலரது வீடுகளின் கதவு, ஜன்னல், தண்ணீர் குழாய் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு “கொலை செய்துவிடுவோம்” என்றும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். கடும் தாக்குதலுக்கு உள்ளான 48 வயது சாதம்மா, 25 வயது வசந்த குமார், 27 வயது சிவக்குமார், 50 வயது நாகராஜன் ஆகியோர் தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால், காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் 7 பேர் மீதே வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பட்டியலின மக்கள் பகுதிக்கு கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் டி.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.பி.ஜெயராமன், நடராஜன், ஆர்.சேகர், மாவட்டக் குழு உறுப்பி னர் அனுமப்பா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் ஆகி யோர் பாதிக்கப்பட்ட மகேந்திரன் வீட்டையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும், பட்டியலின மக்கள் வீட்டுக்குள் புகுந்து பெண்கள் மீது தாக்குதல், பாலியல் சீண்டல்கள், தாலி அறுத்தல், வீட்டில் அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திய ஆதிக்க சாதிய வன்முறையாளர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையரை சந்தித்து இந்த கொடூர சம்பவங்கள் குறித்து விளக்கியும், கடும் தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் பகுதிக்கு கடந்த மூன்று நாட்களாக நிறுத்தப் பட்டுள்ள குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீர்படுத்தி விநி யோகிக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. குடிநீர் விநியோகம் இனி தடைபடாது என ஆணையர் உறுதியளித்தார்.