மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் அங்கு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் திங்களன்று ஒரு நாள் வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.