சென்னை:
ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப் பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி யை மே 22 (இன்று) நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழககாவல்துறை, தியாகி களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்துள்ளது. தேர்தல் விதிமுறையை காரணம் காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக் கிறது போன்ற அற்பமான காரணத்தைச் சொல்லி தூத்துக்குடியிலும், தேனி மாவட்டம் போடியிலும் வாலிபர் சங்கத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக அரசும், காவல் துறையும் தூத்துக்குடியில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.எஸ். முத்து மீது அபத்தமான மிரட்ட லுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நினைவஞ்சலி கூட்டம் நடத்துவதை தடுக்க முயற்சித்துள்ளது.
இத்தகைய ஜனநாயக விரோத செயலை சங்கத் தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர். திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் மே 22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தியாகிகள் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை வாலிபர் சங்கம் நடத்திடும். எனவே தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் ஜனநாயக ரீதியில் நடைபெறுவதற்கு உரிய அனுமதியை வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.