tamilnadu

img

“ஐயோ அம்மா தொடாதே... அரசுப் பள்ளியை மூடாதே”

அரசுப் பள்ளிகளை தமிழக அரசு மூடுவதற்கு முயற் சிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகத்தின் நான்கு முனையிலிருந்து சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது.சென்னையில் துவங்கி காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களின் வழியாக மே 25 முதல் 31வரை பிரச்சாரம் செய்து திருச்சியில் பிற குழுக்களுடன் அணிசேர உள்ளனர் சென்னை குழுவினர். ஐந்தாம் நாளான புதனன்று 68 பேர் கொண்ட மாணவர் குழு உளுந்தூர்பேட்டைக்கு வந்தபோது அவர்கள் நம்மிடம் கூறியவைதான் இவை.அரசுப் பள்ளிகளை பாதுகாக்க நடத்தப்படும் இந்த சைக்கிள் பிரச் சாரத்தில் கடந்த 5 நாட்களில் உங்களின் அனுபவம் என்ன' என்ற நம் கேள்விக்கு, பட்டென்று பதில் சொல்கிறார் இந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு செல்லக்கூடிய மாணவி டி.ஆர்.அனு. “இந்த சைக்கிள் பிரச்சாரமே எனக்கு புது அனுபவம்தான்”. இவரது தந்தை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்ஹில்ஸில் வசிக்கும் டி.சி.ரமேஷ். ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிகிறார்.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பாரதிகண்ணம்மா  பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுள்ளார்.“எங்களுடைய இந்தப் பிரச்சாரம் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. அரசுப் பள்ளிகளை மூடப் போகிறார்களா. மாணவர்களின் கல்வி என்னாவது என்று அதிர்ச்சியுடன் நம்மிடம் கேட் கின்றனர் பொதுமக்கள்” என்றார் பாரதி கண்ணம்மா.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி காவியாவோ “எனக்கு பெரும் உற் சாகமாக இருக்கிறது. எங்களுடைய பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவில் இல்லாத நிலையில் மாணவியர் படும் அவதி சொல்லிமாளாது. எனவே இந்தப் பிரச்சாரத் தில் நான் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளேன்” என்றார்.மாணவி சூர்யாவும் திருவள்ளூர் மாவட்டம்தான்.  எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர் சைக்கிள் பயணத்தின்போது தவறி கீழே விழுந்து விட்டார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. சைக்கிள் ஓட்ட வேண்டாம் வேனில் அமர்ந்து வா என்று சொன்ன போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே “நான் சைக்கிளில் தான் வருவேன்” என்று கூறி உறுதியுடன் ஐந்து நாட்களாக தொடர்ந்து சைக்கிளில் பயணிக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்றிருக்கும் இசைக் கல்லூரி மாணவி கலைச்செல்வி கூறும்போது “இந்திய மாணவர் சங்கத்தின் இந்த பிரச்சாரம் என்பது தமிழக அரசை உலுக்கும். இதில் எழுப்பப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்கும்” என்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பனும், துணைச் செயலாளர் சந்துருவும் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது,“பொதுவாக விழுப்புரம் உள் ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக கிராமப்புறங்கள் வழியாகவே இந்த பிரச்சாரத்தை நடத்தி செல்கிறோம். ஏராளமான அரசுப் பள்ளிகளை இடையில் காண்கிறோம். பரிக்கல் கிராம ஆரம்பப் பள்ளியில் மதுபானம் அருந்திக் கொண்டிருப்பவர்களையும்,  அதேபோல பல பள்ளிகளில் குடிநீர் டேங்க் சேதமடைந்து கிடப்பதையும் பார்த்தோம். கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பதையும், அதற்கு தண்ணீர் வசதியும் இல்லை என்பதையும் கவனித் தோம். இவற்றையெல்லாம் தமிழக அரசு போக்கக்கோரி மக்களிடம் கோரிக்கைகளை கொண்டு செல்கிறோம்.” என்றனர்.

பிரச்சாரம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும்  கிராமப் புற பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் மாணவர்களின் இந்த பிரச்சார பயணத்தை வரவேற்று வாழ்த்தி தாங் களாகவே நிதி உதவி செய்கின்றனர். உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரக்குழு செல்லும்போது காரில் வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த அருள் என்பவர் அவராகவே ஆயிரம் ரூபாயை நன் கொடையாக கொடுத்து வாழ்த்தினார்.இதேபோல இம் மாவட்டங்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழியில் பார்த்த இடத்தில் எல்லாம் “நாங்கள் செய்யவேண்டியதை மாணவர்களாகிய நீங்கள் செய்கிறீர்கள். நாட்டின் எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படுகிறது” என்று நெகிழ்ந்து வாழ்த்தியதும் நடைபெற்றது.இந்தப் பிரச்சார பயணத்திற்கான செலவுகளை வழிநெடுக ஏழை, எளிய மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் உண்டியல் மூலமே வசூல் செய்து சமாளிக்கின்றனர் இந்த மாணவர்கள்.அரசுப் பள்ளிகளை பாதுகாக்க விழுதாய் தாங்கும் இந்திய மாணவர் சங்கம் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே மலர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

-வி.சாமிநாதன்