சென்னை, மே 11- கச்சத்தீவு குறித்து பாஜக தலை வர் அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்கள் போலி என்று தெரிய வந்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறி ஞருமான பி. வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பி.வில்சன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத் தீவு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து, தகவல் உரிமை சட்டம் (RTI) வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்கள் என்று சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். கடந்த, 1961-ஆம் ஆண்டு அப் போதைய பிரதமர் நேரு, கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கி யத்துவம் தர வேண்டிய அவசிய மில்லை என்றும், அதன் உரிமை யை இலங்கைக்கு விட்டுத் தர தயா ராக இருக்கிறேன் என்று கூறியதாக வும் அண்ணாமலை தெரிவித்தி ருந்தார்.
தொடர்ந்து, தமிழகம் வந்த பிர தமர் மோடியும், கச்சத்தீவு விவ காரத்தில், திமுகவும், காங்கிரசும் சேர்ந்து தமிழகத்துக்கும், இந்தி யாவுக்கும் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால், கச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை காட்டிய ஆர்டிஐ ஆவணம் போலியானது என்று ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். ‘கடந்த மார்ச் 5-இல் கச்சத்தீவு தொடர்பான ஆவணங்களைக் கேட்டு, அண்ணாமலை விண்ணப் பம் செய்கிறார்.
இதற்கு வெளியுற வுத்துறை அமைச்சகத்தில் பணி யாற்றும் உயர் அதிகாரி ஒருவர், அதே துறையின் கீழ் நிலை செய லாளராக பணியாற்றிய அஜய் ஜெயின் என்பவரிடம், அண்ணா மலை கேள்விக்கான பதில்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கி றார். அந்த அஜய் ஜெயின் என்ற கீழ்நிலை அதிகாரி, மார்ச் 31ல், 17 பக்க பதிலை வழங்கி, விண்ணப் பத்தை முடித்து வைக்கிறார். அதா வது, அண்ணாமலையின் ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு பதில் வழங்கி யவர் பெயர் அஜய் ஜெயின்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், வெளியுறவு அமைச்ச கத்தின் இணையத்தளத்தில், அஜய் ஜெயின் என்ற அதிகாரியின் பெயர் எங்குமே குறிப்பிடப்பட வில்லை. வெளியுறவுத் துறையில் கீழ் நிலைச் செயலராகப் பணியாற்றும் அலுவலர்கள் குறித்த விவரங் களை ஆர்டிஐ வாயிலாக கேட்ட போதும், அந்தப் பட்டியலில் அஜய் ஜெயின் என்ற அதிகாரியின் பெயர் இல்லை. மொத்தத்தில் இல்லாத ஒருவர் அளித்த பதிலை வைத்துத் தான், பாஜக அரசியல் செய்ய முயன்று உள்ளது” என்று அர விந்தாக்ஷன் அம்பலப்படுத்தியுள் ளார்.
இதையொட்டி, ‘கச்சத்தீவு விவ காரத்தில் இல்லாத அதிகாரி பெய ரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜக சதி செய்துள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்படும்’ என தமி ழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ‘கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நாடா ளுமன்றத்தில் விவாதிக்க முடி யாது’ எனக் கூறும் ஒன்றிய அரசு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலைக்கு மட்டும் அதன் ஆவ ணங்களை எப்படி கொடுத்தது? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
1976-இல் எந்தப் பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்பட வில்லை என 2015-இல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு ஆர்டிஐ தகவலில் வெளி யுறவுத்துறை அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது. எனவே, இந்த விவரங்கள் அனைத்தும் புனையப்பட்ட தக வல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இது பற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழு மையாக விசாரிக்க வேண்டும்.” இவ்வாறு பி.வில்சன் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.