விழுப்புரம், ஏப்.7- உடல்நலக்குறைவால் காலமான விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை யுடன் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, விழுப்புரம் கலை ஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டி ருந்த புகழேந்தியின் உடலுக்கு முதல் வர் மு.க. ஸ்டாலின், சனிக்கிழமை (ஏப்.6) அஞ்சலி செலுத்தினார். பின் னர் அவரது உடல், சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, அதிமுக முன் னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், கவுதம சிகாமணி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், து. ரவிக் குமார் எம்.பி. உள்ளிட்ட ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.
கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி
மறைந்த புகழேந்தியின் உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாவட் டச் செயலாளர் என். சுப்பிரமணி யன், முன்னாள் எம்எல்ஏ ஆர். ராம மூர்த்தி ஆகியோர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நகரச் செய லாளர் நைனா முகமது தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. விக்கி ரவாண்டி வர்த்தகர்களும் கடை களை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எம்.எல்.ஏ புக ழேந்தியின் உடல் உடல் தகனம் செய் யப்பட்டது.