அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டுமே: வேலுமணி
கோயம்புத்தூர், பிப். 6- “அதிமுக-வுக்கு எதிரி திமுகதான். அதிமுக-விற்கு போட்டி திமுக உடன் மட்டும் தான். மற்ற கட்சிகள் நம்மு டன் போட்டி போடவே முடி யாது. சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் எடப் பாடி பழனிசாமி முதலமைச் சராக வருவார். ஆனால், தொண்டர்களை சோர் வடைய செய்வதற்காக அதி முக உடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என பொய் செய்திகளை பரப்பு கிறார்கள்” என்று அதிமுக முன் னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார்.
அங்கித் திவாரிக்கு ஜாமீன் மறுப்பு
திண்டுக்கல், பிப். 6 - திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்ற மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் மறுக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக் கப்பட்டார். ஏற்கெனவே இவர் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 30.1.2024 அன்று அவரது வழக்கறிஞர் செல்வம், அங்கித் திவாரிக்கு ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக் கல் செய்தார். இந்நிலையில், செவ்வாயன்று (பிப். 6) அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டு, மீண்டும் மதுரை சிறை யில் அடைக்கப்பட்டார். (ந.நி.)
பாஜக ஒரு வெட்டிச்சுமை: அதிமுக சாடல்
திண்டுக்கல், பிப். 6 - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில், மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உரை யாற்றினார். அப்போது, “வேண்டா வெறுப்பாக- கசப் பாகத்தான் பாஜகவை தூக்கி சுமந்தோம். அந்த கட்சி ஒரு வேஸ்ட் லக்கேஜ். பாஜக-வை தலையில் வைத்துக்கொண்டு நாம் ஏன் தாழ்ந்துகொள்ள வேண்டும் இப்போது அதைத் தூக்கி எறிந்துவிட்டு சுதந்திரமாக வெற்றிநடை போடுகிறோம்” என்று தெரிவித்தார்.