tamilnadu

எழும்பூர்,புதுக்கோட்டை மற்றும் திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 27ஆவது வட்டத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். இதில் தொகுதி செயலாளர் கே.முருகன், ஆறுமுகம், கார்த்திக், க.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டதை அடுத்து சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 91, 92ஆவது வட்டங்களில் திங்களன்று (ஏப். 8) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் க.பீம்ராவ், தொகுதி செயலாளர் தாமஸ், மாதர்சங்க சரவணசெல்வி, திமுக தொகுதி செயலாளர்கள் காரம்பாக்கம் கணபதி, ராஜன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் துரை.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளர் பிரான்சிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

;