tamilnadu

சென்னையில் நகர்ப்புற சுணக்கம், வெயில் காரணமாக வாக்குப்பதிவு குறைந்தது

சென்னை, ஏப்.20- சென்னை வாக்குபதிவுக்கு ‘நகர்ப்புற சுணக்கமே’ காரணம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதி காரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தொகுதி களிலும் வாக்குப்பதிவு ஏப்.19ந் தேதி நடந்தது. தேர்தலில் 69.46 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3 விழுக்காடு சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைவாக சென்னையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சென்னையில் 48.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்க ளித்தள்ளனர். சென்னையில் வழக்க மாகவே குறைவான வாக்குகளே பதி வாகும்.  அதிலும் மத்திய சென்னை தொகுதியில் 53.91 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

வடசென்னை தொகுதியில் 2019இல் 64.26 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 60.13 விழுக்காடு வாக்குகள் பதிவாகி யுள்ளது. தென்சென்னையில் 2019இல் 57.07 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 54.27 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

மத்திய சென்னையில் கடந்த முறை 58.98 விழுக்காடு வாக்குகள் பதி வான நிலையில், தற்போது 53.91 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது கடந்த முறையை விட சுமார் 4 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 56.10 விழுக்காடு வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது. ஒருபகுதியினர் மட்டும் வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. நாம் வாக்களிக்கா விட்டால் என்ன? மற்றவர்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற ‘நகர்ப்புற சுணக்கமே’ வாக்குப்பதிவு குறைய காரணமாக இருந்துள்ளது. வாக்குப்பதிவை அதிகரிக்க 47 வகை யான முயற்சி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியை எடுக்காவிட்டால் இந்த அளவிற்கு கூட வாக்குப்பதிவு நடந்தி ருக்காது.

மதியத்திற்கு பிறகு வெயில் அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட சுணக்கம், அடுக்குமாடி குடி யிருப்பவர்களில் வாக்களிக்க முன்வராததும் காரணமாக இருந்தது. தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்தான் பழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வரும். அதை தொடர்ந்து செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.