tamilnadu

இந்திய வரலாற்றை எழுதுவதற்கு தகுதியற்ற குழுவை கலைத்திடுக... தமுஎகச மாநிலக் குழு வலியுறுத்தல்

சென்னை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம்செப்டம்பர் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது. 

மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:12000 வருட இந்திய வரலாற்றை எழுதுவதற்கான தகுதியற்றவர்களைக் கொண்டு மத்திய அரசு அமைத்துள்ள குழுவை உடனேமுற்றாக கலைக்க வேண்டும். இந்தியாவின் உண்மையான வரலாற்றை முன்வைக்கும் விதமாக இணையவழியில் தொடர் உரையரங்கத்தினை தமுஎகச நடத்துகிறது. ஆய்வுப்புலத்தில் மதிக்கத்தக்க பங்காற்றி வரும் தமிழக, இந்திய வரலாற்றாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிவிப்புகள், விண்ணப்பங் கள், ஒப்புகைச்சீட்டுகள் போன்றவற்றில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தமிழை, தமிழர்களை அவமதிக்கிற இந்த ஏற்கத்தகாத நிலையினால் தமிழக மக் கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.  எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசுஅலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும்.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகபோராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி 53 பேரை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தில்லி போலீசார், இந்த வன்முறைக்கு ஆளானவர்களையும் பல்கலைக் கழக மாணவர்களையும் அரசியல் செயற் பாட்டாளர்களையும் பொய்வழக்கு புனைந்து கைது செய்துவருவது கண்டிக்கத்தக்கது. மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கு மத்திய அரசின் உள்துறை மேற்கொண்டுள்ளஇந்த ஆள்தூக்கும் போக்கை கைவிட வேண்டும் என மாநில குழு வலியுறுத்துகிறது.இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், பொதுச் செயளலாளர் ஆதவன் தீட்சண்யா, பேரா.அருணன், ச.செந்தில்நாதன், கெளரவத் தலைவர் ச.தமிழ்ச்செல் வன், துணைத்தலைவர்கள் நன்மாறன், திரைக்கலைஞர் ரோஹினி, நந்தலாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.