தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்க செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது அரசின் கொள்ளை முடிவு என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் சட்ட விரோத உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக்கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.