சென்னை, மார்ச் 16 - அதிமுக, பாமக ஆதரிக்காவிட்டால் குடியுரிமை திருத்தச் சட்டமே (சிஏஏ) வந்திருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 15) சைதாப்பேட்டையில் அரசியல் விளக்க, நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு சார்பில் வழங்கப்பட்ட 42 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு கே.பால கிருஷ்ணன் பேசியது வருமாறு:
ஆமாம் சாமி போட்ட அதி முக, பாமக உறுப்பினர்கள் 11 பேர் மாநிலங்களவையில் ஆதரிக்கா மல் விட்டிருந்தால் சிஏஏ சட்டம் வந்திருக்காது. சிஏஏவை ஆதரித்து விட்டு, சிறுபான்மை மக்களுக்கு பாது காப்பாக இருப்பேன் என்று எடப்பாடி கூறுவது அபத்தமானது.
நுழைவு வாயில் குஜராத்!
குட்கா விவகாரத்தில் முதல் குற்ற வாளியான விஜயபாஸ்கரை அமைச்சராக வைத்திருந்தவர் எடப்பாடி. ஆனால், தமிழத்தில் போதைப்பொருள் அதிகரித்து விட்ட தாக கூறுகிறார். குஜராத் மாநிலம்தான் போதைப் பொருட்களின் நுழைவு வாயிலாக உள்ளது. ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரையிலான போதை பொருள் கடத்தப்படுகிறது. குஜராத்தில் தடுத்தால் நாடு முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
எழுச்சி
தேர்தல் பத்திரம் வாயிலாக பாஜக கள்ளத்தனமாகவும், மிரட்டியும் பணம் பறித்து வந்ததை மார்க்சிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறுவது உண்மைதான். அது பாஜகவை வீழ்த்துவதற்கான எழுச்சிதான்.
எட்டி உதைத்தாலும் விலகி செல்லாத அதிமுகவை கூட்டணியில் இருந்து ஓட வைத்ததும், சரத்குமார் – ராதிகா என இரண்டே பேர் உள்ள கட்சியை பாஜக வின் இணைத்ததும்தான் அண்ணா மலையின் சாதனை. வாரிசு அரசி யலை எதிப்பதாக கூறிவிட்டு, பாமக வுடன் கூட்டணி பேசுகின்றனர். முரண்பாடுகளின் உருவமாக பாஜக உள்ளது.
இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே, நாடாளு மன்றத்திற்கு குறைந்த நாட்கள் சென்றவர் மோடி. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காத அவர், கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலுக்கு சென்று பூசாரி வேலை செய்கிறார்.
பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைத்துவிட்டு, ஆட்டோக்களுக்கான கேஸ் விலையை கிலோவிற்கு ஒரு ரூபாய் உயர்த்தி உள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் ஒன்றைக் கூட தீர்க்கவில்லை.
கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி
தேர்தலுக்கு செய்யும் செலவை குறைக்க ஒரேநாடு ஒரேதேர்தல் முறையை கொண்டு வருவதாக கூறு கின்றனர். நாட்டின் ஜனநாயகத்தை காவு கொடுக்கின்றனர். கல்விக்கடன், விவசாய கடன், சிறுகுறு தொழில் நிறுவனங்களின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிற ஒன்றிய அரசு, பெருமுதலாளிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, வரிச்சலுகையாக கொடுத்துள்ளது. இது தமிழகத்தின் 4 ஆண்டு பட்ஜெட்டிற்கு சமமானது. இந்த தொகையை வைத்து நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டிக் கொடுத்திருக்க முடியும்.
நிவாரணம்
சென்னையும், தென்மாவட்டங்க ளும் வெள்ளத்தில் தத்தளித்தபோது மோடி வந்து பார்க்கவில்லை. மாநில அரசு கேட்ட 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தில் ஒரு பைசா கூட வழங்கவில்லை. தமிழகத்தையும், நாட்டு மக்களையும் வஞ்சிக்கும் பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வீழ்த்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், பா.பால கிருஷ்ணன், ம.சித்ரகலா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தீ.சந்துரு, ரா. பாரதி, மாவட்டச் செயலாளர்கள் கே.மணிகண்டன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஒய்.இஸ்மாயில் (சிறு பான்மை மக்கள் நலக்குழு) உள்ளிட்டோர் பேசினர். 140வது வட்டச் செயலாளர் எம்.சரவணன் நன்றி கூறினார்.
முன்னதாக பகுதிக்குழு உறுப்பி னர் டி.அன்பரசு வரவேற்றார்.மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், ச.லெனின், ஜி.செந்தில்குமார், தே. சுந்தர் உள்ளிட்டு ஆயிரக்கணக் கானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஏழைகளை கசக்கிப்பிழியும் பாஜக: என்.குணசேகரன்
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில், “பாஜக கார்ப்பரேட்களின் இந்துத்துவா ஆட்சி நடத்துகிறது. இருவேறு இந்தியாவை உருவாக்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வாடியபோது, 80 விழுக்காடு மக்களின் வருவாய் வீழ்ந்த நேரத்தில் பாஜக அரசு பில்லியனர்களை உருவாக்கியது. வரிகளை உயர்த்தி சுரண்டியது. மாநிலங்களில் இருந்து வசூலிக்கும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசாதான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறது” என்றார்.
“கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அதிக வரி விதிப்பதற்கு மாறாக, ஏழை எளிய மக்களிடம் கசக்கிப் பிழிகிறது. முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன், வரி தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மாநிலங்களுக்கான நிதியை தர மறுக்கிறது” என்றும் அவர் கூறினார்.
“நாட்டின் மதச்சார்பின்மை, மக்களை பாதுகாக்க வேண்டும். மதரீதியில் மக்களை பிளவுபடுத்துவதை தடுக்க வேண்டும். அதற்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் எனவே, மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.