tamilnadu

img

மாற்றுத்திறனாளி மாணவிக்கு கல்வி உதவி

கடலூர், டிச.10- கடலூர் அனைத்து குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டு 3 மாணவிகளை தத்து எடுத்து அவர்களின் கல்வி செலவுகளை ஏற்பதாக முடிவுசெய்யப்பட்டது. ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடி காட்டு நாயக்கர் சமூகத்தை சார்ந்த மாற்று திறனாளியான தசை நார்பிடிப்பு நோய் உள்ள நகரவே முடியாத 17வயது நிரம்பிய மாணவி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

வீட்டிலேயே இருந்து படித்துவரும் அக்க்ஷயாவுக்கு முழுகல்வி உதவியும், அவர் நடமாடுவதற்கான முழு உதவியும் குடியிருப்போர் சங்கம் சார்பாக அளிக்கப்பட்டது. அக்ஷயாவின் சகோதரியும் காதுகேட்காத சிறிதளவு பேசமுடிந்த மாற்றுதிறனாளி ஆவார்.

அவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு படித்து வருகிறார். அவருக்கு பயிற்சி உதவி கட்டணமும், அதற்குமேல் என்ன படிப்பு படித்தாலும் உதவுவது என்று முடிவு செய்து உதவித் தொகையினை வழங்கினர். நிகழ்ச்சியில் கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.