மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு அரசியல் நையாண்டி செய்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரை கண்டித்தும், உடனடியாக மாற்றுதிறனாளியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நகரத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெள்ளி கண்ணன், மாவட்டச் செயலாளர் தாட்சாயணி, மாவட்டத் துணைத் தலைவர் லிங்கன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.