tamilnadu

img

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்: ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி

சென்னை, ஜூலை 12- அட்டக்கத்தி, மெட்ராஸ்,  கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் தந்தை பாண்டு ரங்கன் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அதிகாலை காலமா னார். அவருக்கு வயது 63. தமிழ்நாடு சிட்கோ நிறு வனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாண்டுரங்கன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். திருவள்ளூர் மாவட் டம் கரலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினார். பா. ரஞ்சித், அவரது சகோதரர் வழக்கறிஞர் பிரபு ஆகி யோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.  சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.செல்வா, இரா.சிந்தன், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா, தமிழ் நாடு  தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.கே. மகேந்திரன், பி.டில்லி பாபு, மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. சுகந்தி, சிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர். எஸ். கோபால், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி. சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் இ.மோகனா, கே. ரமா, அ.து.கோதண்டன், செம்மல், ஈ.எழிலரசன், இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், இசையமைப்பாளர் சந் தோஷ் நாராயணன், நடிகர் கள் ஆரியா, ரிஷிகா, கலை யரசன், தினேஷ், லிங்கேஷ் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை மாலை  4 மணிக்கு அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது  இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது.