சென்னை, ஆக.24- பங்குச் சந்தை வர்த்தகங்க ளில், தில்லு முல்லுகளில் ஈடு பட்டுள்ள அதானி குழும நிறுவனங் களில், ‘செபி’ தலைவர் மாதவி புச் பங்கு முதலீடு செய்துள்ளார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை ஆதா ரத்தோடு குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்குப் பிறகும் ‘செபி’ தலை மைப் பொறுப்பில் மாதவி புச் தொடர்வது நிலைமையை இன் னும் மோசமாக்கும். ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனத்தின் புல னாய்வு இந்த விஷயத்தில் இத் தோடு நிற்கப்போவதில்லை. உண்மையை மூடி மறைக்க, மறைக்க அரசு மேலும் மேலும் அம்பலப்படும். எனவே, மாதவி புச் ‘செபி’ தலைமைப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ‘தி இந்து’ குழுமத் தலைவரும் புகழ் பெற்ற பத்திரிகையாளருமான என்.ராம் வலியுறுத்தியுள்ளார்.
அதானி ஊழல் தொடர்பான சிறப்புக் கருத்தரங்கம்!
‘ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமம், செபி: தேவை ஒரு சுயேச்சையான விசாரணை’ எனும் மையப் பொருளில் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக. 23) இந் திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற் பாடு செய்திருந்த சிறப்புக் கருத்த ரங்கில் உரையாற்றிய என். ராம், “இந்த பிரச்சனை மிகவும் ஆழமா னது, பெருவர்த்தக நிறுவனங்க ளுக்கு சாதகமாக இயங்கும் ஒன் றிய அரசு தனது பொறுப்பில் இருந்து தப்ப முடியாது” என்று குறிப்பிட்டார். “ஹிண்டன்பர்க் முதல் அறிக்கை 2022-இல் வெளி யிடப்பட்டது. அதானி குழுமங்கள் பங்குச் சந்தை வர்த்தகங்களில் ஏராளமான தில்லுமுல்லுகளில் ஈடுபட்டிருந்ததை, ஹிண்டன் பர்க், தான் மேற்கொண்ட ஆய்வு களின் வாயிலாக வெளிப்படுத்தி இருந்தது. தரவுகளற்ற எந்தப் புகாரையும் அது சுமத்தவில்லை.
தலையிடத் தவறிய உச்சநீதிமன்றம்!
தேர்தல் பத்திரம் விஷயத்தில் முக்கியமான தலையீடு நடத்திப் பல விஷயங்களைத் தேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த உச்ச நீதிமன்றம், ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணையில், தான் செய்திருக்க வேண்டிய தலையீட்டைச் செய்யவில்லை, உரிய விசாரணையை நடத்தி இருந்தால் இந்த அறிக்கையின் மீதான வெளிச்சமும், நாட்டு மக்க ளுக்குச் சென்றடைந்திருக்கக் கூடிய செய்திகளும் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். வேதனையான விஷயம், உச்சநீதிமன்றம் அதைச் செய்யத் தவறி விட்டது என்பது தான். ‘செபி’ செய்த விசார ணையே போதுமானது, வேறு ஒரு நிறுவனத்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருந்தது. இப்போது ‘செபி’யின் லட்சணம் முச்சந்தி யில் நிற்கிறது” என்றார் ராம்.
‘செபி’ விதிகளை மீறி மாதவி புச் வர்த்தகம்!
‘செபி’யின் தலைவரைத் தேர்வு செய்தது யார், அவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய அவர், ‘செபி’ யின் பொறுப்பில் நியமிக்கப்படு வோர் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது, மேலும், தான் பங்குகள் வாங்கி இருப்பதை மாதவி புச் அரசுக்குத் தெரிவித்தாரா, அப்ப டியே தெரிவித்து இருந்தாலும் அப்படி வாங்குவோர் அந்தப் பொறுப்பில் தொடர்ந்து இயங்க முடியாது, தான் பங்கு வாங்கி யுள்ள நிறுவனம் மீதான விசார ணையில் இருந்து மாதவி விலகி யிருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை” என்பதையும் ராம் சுட்டிக் காட்டினார்.
“2014-இல் மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்குச் சற்று முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ‘இந்துத்துவா அமைப்புகள் – கார்ப்பரேட் இரண்டுக்கும் இடையே உருவாகும் கூட்டின் அடிப்படையில் நரேந்திர மோடி எப்படி அதிகாரத்தின் உச்சிக்கு செல்ல முயற்சிக்கிறார்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், நாட்டிற்கு எப்படியான ஆபத்து கள் சூழ்ந்துள்ளன என்பதை விரிவாக விளக்கி இருப்பார்” என்பதை மேற்கோள் காட்டிய ராம், “சுயேச்சையான நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தற்போது வெளிவந்துள்ள விஷ யங்கள் உட்படுத்தப்பட வேண் டும்” என்று அழுத்தமாகக் கூறினார்.
இந்த கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், பொரு ளாதார அறிஞர் பேரா.வி.பி.ஆத் ரேயா ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.