tamilnadu

img

சென்னை ரோகினி தியேட்டரில் தோற்றத்தை காரணம் காட்டி அனுமதி மறுப்பு

     சென்னை ரோகினி தியேட்டரில் முறையாக டிக்கெட் பெற்ற பிறகும் தோற்றத்தை காரணம் காட்டி நரிகுறவ சமுதாய மக்களை படம் பார்க்க அனுமதிக்காமல் தீண்டாமையில் ஈடுப்பட்ட தியேட்டர் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
       நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் இன்று வெளியாகிய நிலையில் முறையாக டிக்கெட் வாங்கிய பிறகும் நரிக்குறவ மக்களை படம் பார்க்க அந்த நிருவனத்தின் ஊழியர் அனுமதிக்கவில்லை அருகில் இருந்தவர்களும் எடுத்துக்கூறியும் அந்த ஊழியர் அவர்களை சற்றும் மதிக்காமல் செய்கையில் அனுமதிக்க முடியாது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலதளங்களில் கடும் கண்டனம் எழுந்த பிறகு அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர் ரோகினி தியேட்டர் நிர்வாகம் அளித்த அறிக்கையில்
பத்து தல படம் U/A சென்சார் பெற்றது என்பதால் 4 சிறார்களுடன் வந்த அவர்களை அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது. இதற்கு U/A சென்சார் என்றால் படத்தை பெற்றோர்களுடன் சிறார்கள் பார்க்க அனுமதி என்றே அர்த்தம் என ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
அதன்பின்னர் கோயம்பேடு காவல் ஆய்வாளர் ரோகினி தியேட்டருக்கு நேரில் விசாரணை மேற்கொண்டார். எழுத்துப்பூர்வமாக புகார் வரவில்லை என்றாலும் செய்திகளின் அடிப்படையில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.