tamilnadu

img

மின்வாரிய ஊழியர்களின் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்க ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்களின் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கள்ளக்குறிச்சி மின் வட்டக் கிளை சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே துணைச் செயலாளர் கே.சலீம் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், தலைவர் கே.விஜயகுமார், செயலாளர் கே.சீனிவாசன், பொருளாளர் எஸ்.வெங்கடேசன், பொறியாளர் அமைப்பின் செயலாளர் எஸ்.சம்பத்ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அதேபோல் கடலூரில் சிறப்புத் தலைவர் சி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் டி.பழனிவேல், மாவட்டச் செயலாளர் என். தேசிங்கு , பொருளாளர் என்.கோவிந்தராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஓசூர் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மத்திய அமைப்பின் திட்டச் செயலாளர் கருணாநிதி, கிருஷ்ணப்பா, ஐக்கிய சங்கச் செயலாளர் செளந்தர்ராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.