காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னி அள்ளி புதூர் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்தங்கரை தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் மாவட்டக் குழு உறுப்பினர் சண்முகம்,விவசாயிகள் சங்க வட்ட தலைவர் குணசேகரன், மாவட்டத் தலைவர் கே.சி.ராமசாமி தலைமை தாங்கினர்.விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ்,வட்டத் தலைவர்கள் லெனின், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.