புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமையன்று (ஜூலை 13) கண்களில் கருப்பு ரிப்பனை கட்டிக் கொண்டு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.