வேதாரண்யத்தில், அம்பேத்கரின் உருவ சிலையை உடைத்து, அராஜகம் செய்தவர்களை கைது செய்யக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தண்டலம், திருநின்றவூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.