செங்கல்பட்டு,நவ.28- அரசாணை எண் 318ன் படி நீண்ட காலமாக வீடு கட்டி குடி இருக்கும் அனை வருக்கும் பட்டா வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்போரூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்போரூர் வட்டாட்சி யர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு வட்டச் செயலாளர் எம்.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் இ.சங்கர், மாவட்ட க்குழு உறுப்பினர் பகத்சிங்தாஸ், வட்டக்குழு உறுப்பினர்கள் லிங்கன், அன்பரசு, நந்தகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னதாக திருப்போரூர் பேருந்து நிலையம் அருகிலி ருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட க்குழு உறுப்பினர் ஆறு முகம், கைத்தறி தொழி லாளர் சங்க நிர்வாகி ஜீவா, வட்டக்குழு உறுப்பினர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரை ஆகியோர் பங்கேற்ற னர். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். வட்டாட்சி யரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
உத்திரமேரூர்
உத்தரமேரூர் வட்டாட்சி யர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு விவசாயச் சங்க வட்டச் செயலாளர் விநாயக மூர்த்தி தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன், வட்டச் செயலாளர் சி.பாஸ்கரன், வட்டக்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், ஆனந்தகுமார், சாம் நிறு வன நிர்வாகி தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.