சென்னை:
கொரோனா பீதிக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்களில் வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டு வருகிறது. கன்னியாகுமரி ரயிலில், நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் சரக்கு ரயில்கள், கார்கோ பார்சல் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு தெற்கு ரயில் வேயிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் 13 சிறப்பு ரயில் கள் தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் இயக்கப் பட்டு வருகிறது. ரயில்களுக்கு முன்பதிவு தொடங் கிய சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.
கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே ‘ஆன்லைன்’ மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண் டிகை காலங்களில் தென் மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, 3 மாதங்களுக்கு முன்பே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக் கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் தற் போது தீபாவளிக்கான முன் பதிவும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங் கப்பட்டாலும், வழக்கமான ரயில் போக்குவரத்து எதுவும் தமிழகத்தில் தொடங்கவில்லை. அதனால் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களிலே பொதுமக்கள் டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில் நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. மேலும் எழும்பூர்-மதுரை (02637/02638) சிறப்பு ரயிலில் 12 ஆம் தேதிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டது.இதேபோல் தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, காரைக்குடி ரயில்களிலும் தீபாவளி பண்டிகைக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.