tamilnadu

டிச. 30 தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, டிச.25 - தமிழ்நாட்டில் வருகிற 30 ஆம்  தேதி வரை மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட  செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிச.26 முதல் 30 தேதி வரை லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக 27, 28 ஆகிய தேதி களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வானம் ஓரளவு மேகமூட்டத்து டன் காணப்படும். நகரின் சில பகுதி களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 28 ஆம் தேதி வரையும், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல  வேண்டாம் என்று அறிவுறுத்தப்படு கிறார்கள்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.