tamilnadu

img

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் மரணம்

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் 1977,80,84,89 ஆகிய நான்கு முறை திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1980-85 வரை தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். இதையடுத்து 1999இல் நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். 

;