tamilnadu

img

தோழர் நெய்வேலி எஸ்.சங்கரன் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இழப்பு

சென்னை, மே 5- மூத்த தோழர் எஸ்.சங்கரன் மறைவு தொழிற்சங்க மற்றும் கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கு இழப்பு  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்  குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெய்வேலியில் சிஐடியு தொழிற்  சங்கத்தை பலமான சங்கமாக உரு வாக்குவதில் முன்னின்று செயல் பட்டவரும் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தோழருமான எஸ்.சங்கரன் சென்னையில் சனிக்கிழமை (மே 4) காலமானார். அவருக்கு வயது  85. இந்நிலையில், தோழர் சங்கரன் மறைவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:

தமிழக தொழிற்சங்க இயக்க வரலாற்றில்‌ தடம் பதித்த - போராட் டப்‌ பாரம்பரியமிக்க முக்கியமான சங்கங்களில்‌ ஒன்று நெய்வேலி  நிலக்கரி நிறுவன (என்‌எல்சி) தொழி லாளர்களுக்கான இந்திய தொழிற்  சங்‌க மையம்‌ (சிஐடியு). தோழர்  சங்கரன் 1965 ஆம் ஆண்டு என்எல்சி  நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 32  ஆண்டுகள் பணியாற்றி 1997 இல் ஓய்வு பெற்றார்‌.

இந்தியாவின்‌ முக்கியமான எரி சக்தி மையமாக விளங்கிடும்‌ நெய் வேலி நிலக்கரிச்‌ சுரங்கத்தை ஒரு நிறுவனமாக நிலைநிறுத்துவதில்‌ கம்யூனிஸ்ட்‌ இயக்கத்திற்கும்‌, சிஐ டியு தலைவர்களுக்கும்‌ முக்கிய மான பங்கு உண்டு. 

தோழர்‌ எஸ்‌.சங்கரனின்‌ சொந்த  ஊர்‌ நெல்லை மாவட்டம்‌ பாப்பாங்  குளம்‌. ஐ.டி.ஐ முடித்து, இந்தியா  சிமெண்ட் ஆலையில்‌ வேலைக்கு  சேர்ந்தார். பிறகு 1965-ல்‌ என்‌எல்‌சி-யில்‌ ஒப்பந்த‌ தொழிலாளியானார். 

இங்கு‌ ஒப்பந்தத்‌ தொழிலாளர் களை நிரந்தர ஊழியர்களாக்கிட நடந்த போராட்‌டத்தில்‌ தோழர்‌ சங்  கரன்‌ முக்கியப்‌பங்காற்றினார். பின்  னர் சிஐடியு சங்கத்திலும் மார்க்  சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியிலும்‌  உறுப்பினரானார்‌. தொழிலாளி யாக இவர்‌ சுரங்கம்-1-ல்‌ பணி யாற்றினார்‌. தொழிற்சங்கப்‌பணி, கட்சிப்பணியில்‌ மட்டுமல்ல, தொழி லாளி என்ற அடிப்படையில்‌ நிறுவ னத்திலும்‌ உண்மையாக உழைத் தார்.

உதாரணத்திற்கு நிலக்கரிச்‌ சுரங்கத்தில்‌ இயக்கப்படும்‌ பக்கெட்‌ வீல்‌ போன்ற பெரிய இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு வேலை நின்றால் பழுதடைந்த இயந்திரத்தை சரி  செய்ய சங்கரன் தலைமையில் குழு  செல்லும் போது பெர்பெக்டாக முடிப்பார்‌ என சுரங்க இயக்குநரின்  பாராட்டு பெற்றவர் சங்கரன். 

1989ஆம்‌ ஆண்டு சிஐடியு, எச்‌எம்‌எஸ்‌ ஆகிய இரு சங்கங்க ளும்‌ இணைந்து எனது தலைமை யில் காலவரையற்ற உண்ணாவிர தப்‌ போராட்டத்தை நடத்தின. அப்போது, உண்ணாவிரதம்‌ தொடங்கிய 6வது நாள்‌ இரவு அன்  றைய முதலமைச்சர்‌ கருணாநிதி தலையிட்டதை தொடர்ந்து அந்தப்‌  போராட்டம்‌ வெற்றியில்‌ முடிந்தது.  சிஐடியு சார்பில் அந்த உண்ணா நிலைப்‌ போராட்டத்தில்‌ கலந்து கொண்ட 7 பேரில்‌ தோழர்‌ சங்கர னும்‌ ஒருவர்‌.

 இவருடைய துணைவியார்‌ தோழர்‌ பத்மா அனைத்திந்திய ஜன நாயக மாதர்‌ சங்கத்தில்‌ பணியாற்றி னார்‌. இவருக்கு கார்த்திக்‌, ராகுல்‌  என்று இரண்டு மகன்கள். இவர்கள்‌  இருவரும்‌ கட்சியிலும்‌, தொழிற்  சங்க இயக்கத்திலும்‌ ஆர்வத்தோடு  பணியாற்றியவர்கள். இதில் மூத்த  மகன் கார்த்தி 2020 ஆம் ஆ‌ண்டு எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்.

இந்நிலையில், 1997-ல்‌ என்‌எல்சி  வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்‌ இயக்க பணிக்கு ஓய்வு ஏது மின்றி நெய்வேலியிலேயே தங்கி  பணியாற்றி வந்த ஒப்பற்ற தோழர்  சங்கரன் மறைவு பெரும் இழப்பாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.