tamilnadu

img

தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் பாஜக இதுவரை என்ன செய்தது?

சென்னை, ஏப். 15 - தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் பாஜக என்ன செய்துள்ளது? என்று திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 105, 106வது வட்டங்களில் திங்களன்று (ஏப். 15) தயாநிதிமாறன் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய சென்னையில் இறுதி கட்ட பிரச்சாரம் செய்து வரு கிறோம். மாநிலம் முழுவதும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடங்களி லெல்லாம் மக்கள் மகத்தான வரவேற்பு அளிக்கின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களை முழுமையாக சென்றடைந்துள்ளது. பெண்கள் அனைவரும் திமுக அணிக்கே வாக்களிப்பார்கள். இந்தியா அணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றார். செய்தியாளர்களின் கேள்விக ளுக்கு பதிலளித்த அவர், “பாஜக தேர்தல் அறிக்கை ‘பெரிய தாக்கத்தை’ ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொரு வர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறி னார்கள். அந்த பணத்தையே இது வரை எண்ணி முடிக்க முடியவில்லை. 10 வருடம் கழித்து புதிதாக பொய் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பொய் சொல்கிறார்கள். 70 வயதானவர்களுக்கு காப்பீடு தரு வார்களாம். தமிழ் மீது அவர்களுக்கு திடீர் பாசம் வந்துவிட்டது. இந்தியா வில் தமிழ் மொழியை வளர்க்காதவர் உலக முழுவதும் திருவள்ளுவர் அகாதமி அமைக்கப் போகிறாராம்.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்’ என்ற கதையாக பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது” என்றார். “முதல் செம்மொழி தமிழ். அதற்கு பிறகுதான் சமஸ்கிருதம் வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தென்னிந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு 68 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டனர்.

ஆனால், சமஸ்கிருதத்திற்கு 688 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதிலிருந்தே அவர்கள் தமிழ் மீது கொண்டுள்ள மதிப்பு தெரிகிறது” என்று கூறிய அவர், “தேர்தலுக்காக தமிழை பற்றி பாஜக பேசுகிறது. தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன செய்தார்கள்? தமிழகத்திற்கு நிதி கேட்டால் தர மறுக்கிறார்கள். நிவாரணம் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்?” என்று எதிர் கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சாரத்தில் திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, பி.வில்சன் எம்.பி., எம்.கே.மோகன் எம்எல்ஏ, நா.ராமலிங்கம் எம்.சி., சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.