சென்னை:
தலித் இளம்பெண் ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உத்தரப்பிரதேச மாநில பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவிவிலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தலித்இளம்பெண் ஒருவரை கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதியன்று சமூக விரோதக் கும்பல் கடத்திச் சென்றுபாலியல் வல்லுறவு செய்துள்ள னர். அதன் பின்னர் அந்த பெண்ணின் கை, கால் மற்றும் முதுகெலும்பை முறித்ததோடு நாக்கையும் அறுத்து, கொடூரமான சித்ரவதைக்குள்ளாக்கி சாலையோர மாக வீசிச் சென்றுள்ளனர்.அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 29 அன்று உயிரிழந்தார். இந்த பாலியல் வன்கொலை வழக்கை மூடிமறைக்கும் வேலையில் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் அந்த மாநிலத்தில் 18 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச்சம்பவங்கள் நிகழ்ந்துள் ளன.
மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
உத்தரப்பிரதேச தலித் இளம்பெண் பாலியல் கொடூர வன்கொலை சம்பவத்தைக் கண்டித்தும்யோகி அரசு பதவி விலகக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வெள்ளியன்று 200க்கும் மேற்பட்ட மையங்களில் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் மற்றும் மாதர்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்விரு அமைப்புகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
பாதிக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு நாடு முழுவதும் போராட்டம்நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் செப்டம்பர்2 வெள்ளியன்று சைதாப்பேட்டை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடியின் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 15 நிமிடங் களுக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிற கொடுமை தொடர்கிறது. ஆண்டுக்கு 2 லட்சம் பெண்கள் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
அவசர அவசரமாக உடலை எரித்தது ஏன்?
ராமர் ராஜ்யம் என்று கூறிக்கொண்டே, பாலியல் குற்றவாளி களை பாதுகாப்பதுடன் அடைக்கல மும் கொடுத்து வருகிறது பாஜகவின் யோகி ஆதித்யநாத் அரசு. ஹத்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண்ணை பாலியல்வல்லுறவு செய்து கொடூரமாக கொன்றுள்ளனர். அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப் படைக்காமல், குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் உடலை எரிக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டு, காவலர்கள் உடலை எரித்துள் ளனர். பலாத்காரம் நடக்கவில்லை என்றால் எதற்காக அவசரஅவசர மாக நள்ளிரவில் கொண்டு சென்றுஉடலை எரிக்க வேண்டும்? மறு உடற்கூராய்வு செய்யக்கூடாது, உடல் சாட்சியம் இருக்கக்கூடாது என்பதற்காகவே எரித்துள்ளனர். பாலியல் வல்லுறவு போன்றவழக்கில் உடலை எரிக்கக்கூடாது, புதைக்க வேண்டும் என்று பல நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும் போது, உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்தநாளே அடுத்தடுத்து பலஇளம்பெண்கள் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கு பெண்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பதவி விலகச் செய்ய வேண்டும்.
யோகி ஆதித்யநாத்தை பதவியிலிருந்து விரட்டும் வரை நாடு தழுவிய இந்த போராட்டம் தொடரும்.பாதிக்கப்பட்ட குடும்பத்தின ரைச் சந்தித்து ஆறுதல் கூற, துயரத்தில் பங்கெடுக்க, உதவிகள் செய்ய தலைவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் உத்தரப்பிரதேச மாநில காவல்துறை அராஜகமாக நடந்துகொண்டுள்ளது. பாலியல் குற்றவாளியை கைது செய்ய யோக்கியதை இல்லாத முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆறுதல்தெரிவிக்க செல்கிறவர்களை தடுத்து வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், சைதை பகுதிச் செயலாளர் வெங்கடேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.