tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க  சைபர் கிரைம் திட்டம்

யூடியூப் சேனல் மீதும் வழக்கு பதிவு

கோயம்புத்தூர், மே 6-  காவல் துறை அதிகாரிகள், பெண்  காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவ தூறாக பேசிய விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட யுடியூப் சேனல் மீது வழக்  குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசா ரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யுடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரி சங்கர். இவர் தனது நேர்  காணல் ஒன்றில், காவல் துறை உயரதி காரிகள், பெண் காவலர்கள் குறித்து  அவதூறாக கருத்துகளை தெரிவித்த தாக புகார்கள் எழுந்தன. 

கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், 4  பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறை யினர் வழக்குப் பதிந்தனர்.

தொடர்ந்து, மே 4-ஆம் தேதி தேனி யில் இருந்த சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்த னர். பின்னர், கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்த சவுக்கு சங்கரின் வீடியோவை வெளியிட்ட ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் மீதும்  சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும், சிறையில் அடைக்கப்பட் டுள்ள சவுக்கு சங்கரை காவலில் எடுத்து  விசாரிக்கவும் சைபர் கிரைம் காவல் துறையினர் திட்டமிட்டு, அதற்கான நட வடிக்கையை மேற்கொண்டு வருகின்ற னர்.

தொடரும் ரெட் அலர்ட்
கன்னியாகுமரி, மே 6- கள்ளக்கடல் எனும் அதீத கடல்  சீற்றத்துக்கான ரெட் அலர்ட் கன்னியா குமரி மாவட்டத்துக்கு இன்னும் நீடிக்கி றது என்று ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

\அவர் அளித்த பேட்டியில், ‘கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ  கிராமங்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவல்படை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை,  சுற்றுலாத்துறை என சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஏற்கனவே எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்  கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க  வேண்டும் என்று கூறியுள்ளார்.

இ-பாஸ் ஏன்?  தமிழக அரசு விளக்கம் 

சென்னை, மே 6- திண்டுக்கல் மாவட்டம், நீலகிரி மாவட்  டம், கொடைக்கானல் போன்ற மலைப்பிர தேசங்களில் கோடை காலத்தில் சுற்றுலா  பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.  அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் நோக்கில் கொரோனா  பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமல்  படுத்தியது போன்ற இ-பாஸ் நடைமுறை யை அமல்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவின் கீழ் மே 7 ஆம் தேதி யில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை யிலான காலக்கட்டத்தில் கொடைக்கா னலில் ஒருவர் இ பாஸ் பெறுவது கட்டாய மாக்கியுள்ளது.

அதன்படி நீலகிரி செல்வோர் இ-பாஸ்  பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இ-பாஸ் அறிவிப்பால் சுற்றுலா பயணி களின் வருகை குறைந்துள்ளதாக தகவல்  வெளியானது.

இந்நிலையில், இ-பாஸ் நடவடிக்கை வாகனங்கள் முறைப்படுத்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது எனவும் இத னால், பொதுமக்களுக்கு எந்த தொந்தர வும் இருக்காது எனவும் தமிழக அரசு  அறிவித்துள்ளது.வெளிமாநில, வெளி  மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்க ளுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. 

அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு  செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்க ளுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மின்தடையை  சரிசெய்ய பறக்கும் படை

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் கத்திரி வெயில் ஆரம்  பித்து, மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கடந்த சில  நாட்களாக மாநிலத்தின் மின்சார தேவை  அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இரவு நேரங்களில் மின்தடையை சரி செய்ய 60 பறக்கும் படைகள் அமைக்கப்  பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை செய லாளர் ஷிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர்  ஷிவ்தாஸ் மீனா மேலும் கூறுகையில், “வெப்ப அலை காலத்தில், தடையில்லா  மின் விநியோகத்துக்கான சிறப்பு செய் யப்பட்டுள்ளன. சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உட னடியாக சரிசெய்ய 60 பறக்கும் படைகள்  அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரி வித்தார்.