கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
திருத்துறைப்பூண்டி, ஜுன் 3- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தியாகி சிவராமன் நினைவிடத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில், கே.வேணுகோபால், மாவட்ட துணைத் தலைவர் தலைமை தாங்கினார். கே.பாலமுத்து, மாவட்டக் குழு உறுப்பினர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஏ.ரங்கநாதன் துவக்க உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் ஜி.முருகையன் (தலைவர்), கே.பாலமுத்து (செயலாளர்), பி. சுரேஷ் (பொருளாளர்) மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கம்பி சிமெண்ட், எம் ஸ்டாண்ட் விலை குறைத்து, கட்டுமான தொழிலாளருக்கு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்துக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் 3000 ஆக உத்தரவாதப் படுத்துக, பொங்கல் தீபாவளி பண்டிகை காலங்களில் பாண்டிச்சேரி அரசு வழங்குவது போல் கட்டுமான தொழிலாளர்களுக்கு 5000 வழங்கிடு போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் மாவட்டத் தலைவர் டி, ராமேந்திரன், மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு, மாவட்ட துணைச் செயலாளர் கே. வேதையன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.